Saturday, May 16, 2015

கர்பிணி பெண்களுக்கு

சில கர்பிணி பெண்களுக்கு மசக்கை சமயத்தில் என்ன சாப்பிட்டால் வாந்தி நிற்கும் வாக்கு ருசி படும் என்று தெரியாது,
டிப்ஸ் உங்களுக்காக..
  

1.கர்பிணி பெண்கள் நான்கு மாதங்கள் வரை ஒரு நாளைக்கு 6 டம்ளர் பால் அருந்த வேண்டும். இது குழந்தைக்கு தேவையான கால்சியம் இதில் குழந்தைக்கு கிடைத்து விடும்.
2. ஸ்வீட்டுக்கு போடும் கிஸ்மிஸ் பழம் நிறைய சாப்பிட்டால் வாந்தி கட்டுபடும். மயக்கமாக இருந்தால் குளுக்கோஸ், ஹார்லிக்ஸ் போன்றவை குடிக்கலாம்.
3. தலைவலி, ஜுரம், சளி, பல் வலி போன்றவைக்கு டாக்டரிம் கேட்காமல் எந்த மாத்திரையும் சாப்பிட வேண்டாம்.
4. சூடு தன்மை உள்ள பழங்கள் காய்கள், உண்வுகள் அதிகம் சாப்பிடவேண்டாம்.
5. சாப்பிட கூடாத பழங்கள்
கொய்யா , பப்பாளி, அன்னாசி, கருப்பு திராட்சை.
6. தினம் சாப்பிட வேண்டிய பழங்கள்
ஆப்பிள், பச்சை திராட்சை,மாதுளை, ஆரஞ்ச்
7. இறால், சிக்கன், பீஃப் போன்றவை கூட ரொம்ப சூடு ‍இதேல்லாம் கூட தவிர்ப்பது நல்லது. சிக்கன் நிறைய தயிர் சேர்த்து செய்து கொஞ்சமாக சாப்பிட்டு கொள்ளலாம்.
8. புரோகோலி மற்றும் ஸ்பினாச் கீரையில் அதிக அயர்ன் இருக்கு, இவை இரண்டையும் அடிக்கடி சமைத்து உண்ணலாம். ஸ்பினாச் சூப், கூட செய்து குடிக்கலாம்.
9. நெல்லிக்காய் நிறைய வாங்கி சர்க்கரை பாகு காய்ச்சி அதில் நெல்லிக்காயை வேகவைத்து பாகில் ஊறவைத்து தினம் ஒன்று சாப்பிடலாம்
10.பெருங்காயம், பூண்டு,சோம்பு சிறிது குறைத்து
பயன்படுத்தவும். 

No comments:

Post a Comment