Thursday, March 17, 2011

பையா பாடல் வரிகள்

Tamil Movie:Paiya Song Lyrics

            சோகப்பாட்டு
ஏதோ ஒன்று என்னை தாக்க --யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க --பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை --கண்ணில் வைத்து துங்கினேன் 
காலையில் விடிந்து போகும் நிலவை --கையில் பிடிக்க ஏங்கினேன்

பெண்ணே உந்தன் நியாபகத்தை --நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகயிலே --நெஞ்சை இங்கு தொலைத்தேனே

என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன் --எதுவும் இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது --எல்லா பாதையும் உன்னிடத்தில்
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய் --என் இரவையும் பகலையும் மாற்றிப்போனாய்
ஏன் இந்த பிரிவை தந்தாய் --என் இதயத்தில் தனிமையை ஊற்றிப்போனாய்
உள்ளே உன் குரல் கேட்குதடி --என்னை என்னுயிர் தாக்குதடி
எங்கே இருக்குறேன் எங்கே நடக்கிறேன் நான்  ....

பெண்ணே உந்தன் நியாபகத்தை ....ஏதோ ஒன்று என்னை தாக்க  ...
பெண்ணே உந்தன் நியாபகத்தை ....

======================================================================
என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி

உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தொழில் சாய ஆசையில்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி

உன் அழகாலே உன் அழகாலே
என் வெயில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி

காற்றோடு கை வீசி நீ பேசினால்
எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே
காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
கொஞ்சம் நடிதேனடி கொஞ்சம் துடிதேனடி
இந்த விளையாட்டை ரசிதேனடி

உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ ஒரு புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்

ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி
உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி 
எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே
யாரும் பாக்காமல் எனை பார்கிறேன்
என்னை அறியாமல் உன்னை பார்கிறேன்
சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது
உன்னை கண்டாலே குதிகின்றதே

என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்
என் அந்தி மலை என் அந்தி மாலை
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவையில்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி 

உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தோளில் சாய ஆசையில்லை
நீ போன பின்பு  சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி


No comments:

Post a Comment